Thirukalukundrtam Temple

Thirukalukundrtam Temple

ஊர் : திருக்கழுக்குன்றம் ( பட்சி தீர்த்தம் )

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருமலை

இறைவி : அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சலேஸ்வரர் பெரியகோவில்

தல விருட்சம் : கதலி / வாழை மரம்

தீர்த்தம் : சங்கு தீர்த்தம்

Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman and Arulmigu Vedhagiriswarar Temple - Thirukazhukundram - Pakshi Thirtham
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம் - பட்சி தீர்த்தம்

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Thirukazhukundram
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்




Thirukalukundram Arulmigu ThiripuraSundari Amman and Vedhagiriswarar Temple - Thirukazhukundram - Pakshi Thirtham,Tamil Nadu - India

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருமலை) திருக்கழுக்குன்றம் - பட்சி தீர்த்தம்

திருக்கழுக்குன்றம் இத்திருத்தலம் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 15km தொலைவில் உள்ளது.. தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களுள் மாணிக்கவாசகர் சொல்லப்பட்ட தலங்கள் 29 திருவாசகத்தில் தலப்பெயருடன் வழங்கும் பதிகங்கள் மூன்று.இத் திருக்கழுக்குன்றம் திருமலை மேலுள்ள சிவ தலங்களில் முதன்மையான திருத்தலத்தில் நான்கு வேதங்கள் மாமலையாக அமைந்து அதன் உச்சியில் இறைவன் வேதகிரீஸ்வரர் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருகிறார். இந்த திருக்கழுக்குன்றத்தில் திருமலை உச்சியில் உள்ள வேதகிரீஸ்வர் திருக்கோவிலுக்கு அருகில் பூஷா, விருத்தா என்னும் முனிவர்கள் தம் பாவங்கள் தீர கழுகு வடிவில் தினசரி காலை 11.30 மணியளவில் வந்து உணவு அருந்தி செல்கின்றன,அதனால் திரு என்னும் அடைமொழி பெற்று திருக்கழுக்குன்றம் என்று ஊருக்கு பெயர் பெற்றது.கழு என்றால் "சூலம்" என்று பொருள். சூலத்தின் மூன்று முனைகளை போல் இம்மலை தோன்றுவதனால் கழுக்குன்றம் என்றும் பெயர் உண்டாக்கியது.

Thirukalukundram Vedhagiriswarar - Bhakthavatchaleswarar

இத்திருமலை வேதம் ஆதலால் இறைவன் திருமேனியே இத்திருமலை என அஞ்சி இங்கு திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் இத்திருமலை மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிருந்தபடியே திருப்பதிகங்களை பாடினார்.அவர்கள் அங்ஙனம் இருந்து பாடிய இடம் நால்வர் கோயில் பேட்டை என இப்பொழுது வழங்கப்படுகிறது

மார்க்கண்டேயர் ஸ்வாமி தரிசனத்திற்காக திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது சங்குதீர்த்த கரையில் பூஜை செய்தார்.அப்போது அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லாததால், அவர் தம் போக சக்தியால் இந்த சங்குதீர்த்த குளத்தில் இருந்து சங்கு மேலே வந்தது.அந்த சங்கினால் பூஜை செய்தார்,அவர் பூஜை செய்த இடத்தில் தீர்த்தகரைஈஸ்வரர் அல்லது மார்கண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இப்போதும் 12 ஆண்டிற்கு ஒரு முறை இத்திருக்குளத்திலிருந்து சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

Thirukazhukundram Arulmigu Vedhagiriswarar Temple,Thirukalukundram

Thirukalukundram hill Temple is one of the famous shiva temple in tamilnadu. Thirukalukundram Temple is located in 14 km from Chengalpattu,70km from Chennai,and 17 km from Mamallapuram. In this Thirukalukundram Temple God Name is Vedhagiriswarar,And Godess name is Thiripurasundari Amman. Thirukalukundram Vedhagiriswarar Temple is one of the 274 thevaram paadal petra sthalam of God Shiva.

தல வரலாறு

திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் தலவரலாறு 

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple History



அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் 

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற திருமுறைத் தலங்கள் 44. அவற்றில் திருக்கழுக்குன்றம் தலமும் ஒன்றாகும். 

 மாணிக்கவாசகரால்  பாடல் பெற்ற சிறப்புத் தலம் மாணிக்கவாசகர் மொத்தம் 7 திருக்கோயில் திருவாசகம் இயற்றியுள்ளார் அவற்றில் உத்தரகோசமங்கை, திருவாரூர், திருப்பெருந்துறை, திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், சீர்காழி, சிதம்பரம், அதேபோன்று பட்டினத்தார், மற்றும் அருணகிரிநாதர் பாடல் பெற்ற திருத்தலம் திருக்கழுக்குன்றம் ஆகும்.

வேதமே மலையாய் இருப்பதால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயிலும், ஊருக்குள் ஒரு கோயிலும் உள்ளது. 

இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது. மலைக்கோவிலில் இறைவன் வேதபுரீஸ்வரர் என்ற பெயரிலும், தாழக்கோவிலில் இறைவன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் 

       இத் திருக்கழுகுன்ற தலத்திற்கு உலகளந்த சோழபுரம், ருத்ரகோடி என்றும் பெயர் உலகளந்த சோழபுரம் என்பது பழைய கல்வெட்டில் உள்ள பெயராகும்.இத்திருமலை சுமார் 500 உயரமும் 2 பர்லாங்கு சுற்றளவு கொண்டது. திருக்கழுக்குன்றத்தில் மூன்று கோயில்கள் உள்ளன.மலைமேல் உள்ள கோயில் தான் மிகவும் புராதன திருக்கோயிகாகும்.இத்திருக்கோவிலின் கருவறை மூன்று பெருங்கற்பாறைகளால் ஆனது, கருவறையின் உட்புறத்தில் மேற்கு பக்கம் மும்மூர்த்திகளின் உருவங்கள் , வடக்கு பக்கம் யோகா தக்ஷிணாமூர்த்தி, தெற்கு பக்கம் நந்திகேஸ்வரர், சண்டேஸ்வரர், உருவங்களை காணலாம்.

        


கழுகு வடிவுடன் இறைவனை பூசித்து பேறு பெற்றமையால் கழுக்குன்றம் என இம்மலை பெயர் பெற்றது.சம்பு ஆதி எண்ணும் முனிவர் இருவரும் கழுகு வடிவுடன் நாள்தோறும் இத்திருமலைக்கு வந்து இறைவனை வலம் வந்துதரிசித்து பிரசாதம் உண்டு போவதை காணலாம்.ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த அருணகிரியார் கழுகு தொழு வேதகிரி என பாடியுள்ளார் .தேவார திருவாசகத்தில் சொல்லப்பட்ட திருக்கழுக்குன்றம் என்னும் பெயரே இன்றும் நிலவுகிறது.


இத்திருமலையில் அமைந்துள்ள லிங்கம் சுயம்பு லிங்கம் வாழை பூவின் உருவில் மணலால் ஆனது சுயம்பு லிங்கத்தின் மேல் கவசத்தினால் மூடப்பட்டிருக்கிறது.இத்திருமலையில் சிவபெருமான் எதிரே நந்தி இல்லை, உச்சி வேளையில் தினம் இரண்டு கழுகுகள் வந்து பண்டாரம் கொடுக்கும் உணவை அருந்தி செல்கின்றன. 1681 ஆம் ஆண்டில் கழுகுகள் உணவு அருந்துவதை பார்த்ததாக டச்சுக்காரர் குறிப்பிட்டுள்ளார்.. .

கழுகுகள் இறைவனை வணங்குவதாலும் சங்கு தீர்த்தத்தில் சங்கு பிறப்பதாலும் இத்தலத்தின் பெருமையை பல நூற்றாண்டுகளாக இந்தியா முழுவதும் பரவியிருப்பதால் வடக்கில் இருப்போர் பக்ஷி தீர்த்தம் என்றே இத்தலத்தை இன்றும் நாடி தமது யாத்திரையில் இத் திருக்கழுக்குன்றத்திற்கு வந்து இறைவனை வணங்கி செல்கின்றனர். இத்திருமலையின் பெருமை உணர்ந்தே சுந்தரமூர்த்தி நாயனார் “கழுகுன்றத்தை தொழுமின்” என்று முதல் ஐந்து பாடல்களில் அம்மலை தொழுவதே போதுமானது, பயன் தரும் என்பதை விளக்குகின்றார்.

 



வேதங்களே இத்திருமலை உருவமாக நிற்கின்றன,வேதங்கள் இறைவனது திருவடிக்கு கீழ் என்றும் இருக்க விரும்ப இறைவனும் வேதங்களை நோக்கி

குன்றென நின்மின் நுங்கள்
கொழுந்திடை அடைவோம் யாமே


எனக்கூறினார். அங்ஙனமே வேர்பாகம் இருக்கு வேதமும், நடுபாகம் யசுர் வேதமும்,முடிபாகம் சாம வேதமும், சிகரம் அதர்வண வேதமும் ஆக இம்மலை உருவாய் வேதங்கள் நிற்கின்றன.

இத்தலத்து பெருமான் சுந்தர மூர்த்திக்கு பொன் அளித்தார், மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துறையில் காட்டிய குரு வடிவை இங்கு மீண்டும் காட்டினார்.அப்பர் பெருமான் இம் மண்ணுலகை நீங்கு முன் கழுகுன்றத்து உச்சியாய் ;உன்னடிக்கே என இத்தலத்து பெருமானை நினைந்து அழைத்தனர்.

இத்தலத்து பெருமான் அடியார்க்கு நல்லார் என்பது அவர் ஞாச்சிழத்து எங்கணும் கன்னிகைக்கு அளித்த பெறும் பேற்றால் அறியக் கிடைக்கின்றது. நாள்தோறும் திருமலைக்கு சென்று இறைவன் முன்னிலையில் திருக்கழுக்குன்ற மாலை போன்ற பாடல்களை பாடி பணிந்து வருவது வழக்கம் ஒருநாள் பெரு மழையால் திருமலைக்கு செல்ல முடியாமல் தன வீட்டிலிருந்த படியே எம்பெருமானே இம் முற்றத்திலே வந்து முன் நிற்கில் எளியேன் பாடி மகிழ்வேன் எனக்கூறி இறங்கி

பெற்றத்தி லேவருங் கோலமும் தாமுமென் பெண்மையுய்ய
முற்றத்தி லேவந்து முன்நிற்கி லோ முது வானவர்தம்
சுற்றத்தி லேகதிர்த் தோற்றத்தி லேதோல்லை நான்மறைநூல்
அற்றத்தி லே கழுக் குன்றத்தி லேகிற்கும் அற்புதனே


என்னும் பாடலை பாடி மனமுருக இறைவர் இவள் வீட்டு முற்றத்தில் காட்சி தர பேரானந்தத்துடன் வணங்கி எழுந்தாள். பின்னர் இறைவன் எழுந்தருளும் போது அவரை பிரிய மனமில்லாமல் இடப வாகனத்தின் திருவடியை இவள் பிடித்துக்கொண்டு கயிலைக்கு சென்றார். 

 


  

 

கன்னிராசி பரிகார ஸ்தலம்

கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன்பிரசண்டன் என்னும் கழுகுகளும்,இரண்டாம் யுகத்தில் சம்பாதிஜடாயு என்னும் கழுகுகளும்மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன்மாகுத்தன் என்னும் கழுகுகளும்நான்காம் யுகத்தில் சம்புஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து சில ஆண்டுகள் முன்பு வரை உணவு பெற்றுச் சென்றுள்ளன. இப்போது அவைகள் வருவதில்லை.

 சங்கு தீர்த்தம்: கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள தெருவின் மறு கோடியில் மிக்க புகழுடைய "சங்கு தீர்த்தம்" உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் தாழக் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும்அதுமுதற்கொண்டு 12ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டுநீராழி மண்டபங்களும்,நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடிமலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

 


அநுக்கிரக நந்திகேஸ்வரர்.


தாழக்கோயிலில் ஐந்துநிலைக்கோபுரம் நுழைந்து இடதுபுறம் (தாழக்கோயில் டிக்கெட் கவுண்டருக்கு எதிரில்) அநுக்கிரக நந்திகேஸ்வரர் தனது தேவியுடன் காட்சியளிக்கின்றார். நந்திகேஸ்வரர் தேவியுடன் காட்சியளிப்பது இந்த தலத்தின் மற்றும் ஒர் சிறப்பாகும்.
 
 

 
 வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம் திருத்தலம்
 
 
 
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோவில் புராண வரலாற்று சிறப்பு மிக்கத் திருத்தலமாகும். வேதங்கள் மலை வடிவில் வந்து தவம் செய்த தலம் இதுவாகும். அந்த மலையின் மீதே வேதகிரீஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முனிவர்கள் 8 பேர் கழுகு உருவில், இத்தலத்து இறைவனை வழிபட்டதால் ‘திருக்கழுக்குன்றம்’ என்று பெயர் பெற்றது.

இங்கு தஞ்சாவூரில் நடைபெறும் மகாமகம் போல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘சங்கு தீர்த்த புஷ்கர மேளா’ என்னும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. பொதுவாக உவர்நீரில்தான் சங்கு தோன்றும். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த ஆலயத்தில் உள்ள நன்நீர் நிறைந்த குளத்தில், ஒரே ஒரு சங்கு பிறந்து வெளி வருவது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். அவ்வாறு தோன்றும் சங்கைதான், சங்குதீர்த்த புஷ்கர மேளாவின் போது, இறைவனை அபிஷேகம் செய்ய பயன்படுத்துவார்கள்.

ஒரு சமயம் வேதங்கள் அனைத்தும் சிவபெருமானிடம் வந்து தொழுதன. ‘இறைவா! இந்த உலகம் அழியும் காலத்திலும், வேதங்களாகிய நாங்கள் அழியாமல் உங்கள் திருவடியின் கீழ் நிலைபெற்றிருக்க வேண்டும்’ என்று வேண்டின.

அதற்கு சிவபெருமான், ‘நீங்கள் ஒரு மலை வடிவாய் நில்லுங்கள். அங்கு நான் சிவலிங்க வடிவில் நீங்கள் செய்யும் பூஜையை ஏற்றுக் கொண்டு ஞான சொரூபமாய் இருந்து அருள்வேன். அந்த இடம் வேதகிரி என வழங்கப்படும்’ என்றார். அதன்படி ருக்வேதம் அடியாகவும், யஜூர்வேதம் மத்தியிலும், சாமவேதம் மேற்பகுதியாகவும், அதர்வணவேதம் மலையின் சிகரமாகவும் அமைந்தன.
 
 

 

திருமாள் வழிப்பட்ட திருக்கழுக்குன்றம் தலம்

      திருமால் உபேந்திர பதவியில் இருக்கும் போது தேவர்கள் அவரிடம் வந்து அரக்கர்கள் தங்களை துன்புருத்து வதினின்றும் காக்குமாறு வேண்டினர். திருமால் அவர்கள் வேண்டு கோளுக்கினங்கி அவுனர்களை கொல்வதற்குச் சென்றனர். அவுனர்கள் பயந்து ஓடி வனத்தில் புகுந்தனர். வனத்தில் இருந்த பிருகு முனிவரின் ஆசிரமத்தை அடைந்து பிருகு பத்தினியிடம் தங்களை காக்குமாறு வேண்டினர். அவ்வம்மையார் அவர்களை ஆசிரமத்தில் ஒளித்து வைத்து வாயிற்படியில் ஒருசட்டு வத்துடன் நின்றனர். அரக்கர்களை தேடிவந்த திருமால் பிருகு முனிவரின் மனைவியை நோக்கி அரக்கர்கள் உங்கள் ஆசிரமத்தில் இருக்கிறார்கள் வழி விடுங்கள் என்றார். அவ்வம்மையார் அடைக்கலமாக வந்தவர்களை விடுவது அறமன்று என்றார்.

 

திருமால் அறிவுள்ள பிருகுப த்தினியே!

நீ அரக்கர்களை விடாமல் தடுத்தனை எனக் கோபித்து அவ்வனம் முழுவதும் தீயில் முழுகும் படி சக்கரத்தை ஏவினார். அந்த சக்கரம் அந்த காடும், அரக்கர்க்ளும் பிருகு முனிவரின் பத்தினியும் வேகும்படி கோபதத்துடன் சுட்டது. சிவப்பெருமானால் முப்புரத்தவர்கள் இறந்தது போல் அவ்வரக்கர்களும் முனிவரின் மனைவியும் அழிந்தார்கள்

 

அவ்வமயம் பிருகு முனிவர் அங்கு வந்தார். தன் மனைவியும் பெரிய வனமும் அழிந்தது. திருமால் ஏவிய சக்கரப் படையால் என்றறிந்து, தன் மனைவியிடத்து வைத்து அன்பினால் மனம் வாடினார். இத்திருமால் திருமகளை விரும்பிய காதலை யுடையவன். பின் வருவதை யறிகிலன், பெண் கொலையையும் கருதவில்லை. அடைக்கலமாக வந்தவர்களை காப்பது அறமாகும். இச்செயலைச் செய்த என் மனைவியைக் கொன்றது அறமாகுமோ எனத்திருமாலை நோக்கி நீ சக்கரமேந்தியது அனைவரையும் காப்பதற்காகும். தேவர்களுக்கு நன்மையும் மேன்மையும் செய்யும் தவத்தினரைக் கொல்வதற்கன்று. என் மனைவியைக் கொன்று துன்பத்தினை விளைவித்த நீ எடுக்கும் பத்து ப்பிறவியில் ஊரையும் விட்டு, அறிவு மயங்கி உயிர் வனத்திற்கு போய் மனைவியைப் பிரிந்து நீயும் தவிக்கக்கடவை எனச் சாபமிட்டார்.  

திருமால் பிருகு முனிவரை நோக்கி உமது மனைவியை இப்போது எழுப்பித் தருகிறேன். என் குற்றத்தைப் பொறுத் தருள வேண்டும் என்று அவர் மனைவியை கொன்ற சக்கரத்தை எதிரில் வைத்து, தன்கால் பெரிய விரலைப் பூமியில் ஊன்றினர். ஊன்றிய இடத்தில் குளிர்ந்த நீருண்டாகியது. அந்த நீரைப் பிருகு முனிவரின் மனைவின் எலும்பு கூடு மீது தெளித்தார். தெளித்தவுடன் அவள் உயிர் பெற்றெழுந்தாள். பிருகு முனிவர் மகிழ்ந்து பலவாறு புகழ்ந்து இந்த நாளில் நானிட்ட சாபப்படி அந்த நாளில் தேவர்களுக்கு உதவியாய் நீ செல்லுங் கானகத்தில் உன் மனைவியை பிரிவாய் .பிறகு நீ அரக்கர்களை கொன்று உன் மனைவியை அடைவாய். நீ முனி பத்தினியை கொன்ற பாவம்நீங்க வேதகிரியை அடைந்து பூசிப்பாயாக எனக் கூறினார்.

பிறகு திருமால் வேதகிரியை அடைந்து திருமஞ்சன நீர் திருப் பள்ளித் தாமம் முதலியவற்றைக் கொண்டு வேத நெறிப்படி பூசனை செய்து வேதகிரீசன் திருவருளை பெற்று தம்பதம் சென்றார். திருமால் அதற்கு முன்னும் திரிபுரத்தில் இருந்த அவுனர்கள் செய்யும் சிவபூசை வழுவும் படி செய்த மாயத்தால் விளைந்த பாதகம் தொலையும் படியும் பிறகு கிருட்டினனாகப் பிறந்த போது மாமனைக் கொன்று பாதகமும் தொலைய வேதகிரி வந்து பூசித்து தொழுது சென்றார். நாராயணன் வழிபட்டதால் இத்தலத்திற்கு  நாராயணபுரிஎனும் பெயருண்டாகியது

பாடல் பெற்ற திருத்தலம் ஒரு நாவால் உலகை ஆண்ட திருஞாவுக்கரசரும், சீர்காழிப் பிள்ளையார் திருஞானசம்பந்தரும், தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்திசுவாமிகளும்,       தெய்வத் திருவாசகம் தந்த மாணிக்கவாசகரும், அருந்தவ புதல்வர் அருணகிரி நாதரும் பைந்தமிழ்ப் பாவேந்தர் பட்டினத்தாரும் காதலால் கசிந்து உருகிக் கண்ணிர் மல்கப் பாடியுள்ள திருத்தலம்.

 

 

 

 


 

 

 

 

இந்திரன் வணங்கும் தலம்

    மலை மேல் உள்ள வேதகிரீஸ்வரர் கருவறையில் அனைத்து தெய்வங்களும் உள்ளனர். ஈசனை இந்திரன் பூஜிக்கும் தலம் இது. இந்திரன் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சன்னதியில் நுழைந்து இறைவனை வலம் வந்து, பூஜித்து விட்டுச் செல்வார். இதற்கு ஏற்றாற் போல் கோயில் விமானத்தில் ஒருதுவாரம் உள்ளது. அதன் வழியேதான் இந்திரன் இடி உருவில் வந்து செல்வார். இடி இறங்குவதால் இவ்வாலயத்திற்கு எந்த சேதமும் ஏற்பட்டதில்லை.

 

 
 Thirukalukundram Temple History
 
 
 
 This Thirukalukundram Temple  situated forty-five miles to the South of Madras and 9 miles to the south east of Chengalpattu Railway Station. The Northerners know this place by its familiar name of Patchi Thirtham. Two Eagles come here daily at 11 :30A. M. to the Hill and return after having been fed. The inscriptions refer to this place as “‘Ulakalanda Cholapuram’’. 
 

In this Thirukalukundram  Temple Lord Vedhagiriswarar  is the Swayambu murthi.  Vedhagiriswarar  is worshiped by eagles the name as “Kazukasalam”, Mahavishnu is worshiped as "Vedanarayanapuri”, Brahmans worshiped the name as "Brahmapuri” Vedhagiri,Vedhachalam,Gangasalam, Patchi theertham with names.
 
 
This Thirukalukundram Vedhagiriswarar temple on the hill is one of the oldest. Of all the rock temples, that which is found a top hill is considered to be the oldest in Tamil Nadu. The place looks a small town. Some other Sanskrit names for the place are Vedapuri, Dakshina Kailasam and Rudrakoti. 
 
The Hill is 500 feet high and Lord Vedhagiriswarar dwells on the top. The very hill is said to be the four Vedas; the peak is said to symbolise Atharvana Vada on which the temple is found. Thus the hill is termed Vedagiri. At the foot of the hill there is a big Siva temple of Bakthavathaleswaar , adjoining which are found Sankuthirtham and the Sannadhi of Rudrakotiswarar. The inscriptions in the temple of the Goddess also show that they are as old as the temple on the hill,
 
 
 
 
 
 

TIRUKALUKKUNDRAM Kanni Raasi Parikara Temple

 

 In This Tirukalukundram  temple at the top of the hill, the Vedhagiriswarar Shiva is facing east; Vedhagiriswarar is a Swayambu: it is protected by a Kavacham. At the foot of the Linga is the figure of Markandeya.

 

 On the Northern wall, figure of Yoga—Dakshinamurthi is found. There are also other figures like those of Brahma, Vishnu, Nandhi, Sandeswar. Somaskandar, Boga Sakthi etc. 

 

The sannadhi of Goddess Chockammal is in the inner Prahara facing north. Sthalavritcha is the Banana Tree.


 

Thiruppam Tharum Annai ThiripuraSundari Amman

 

       Annai Thirupurandhari Amman is a Swayambhu in this thirukalukundram Temple,Thiripura sundari Amman is Murtam and Ashtangaanth were made of eight eight kinds of perfume.  Only during the three days of year in Aadipuram,Panguni Uthiram, Navami coming in Navratri The whole anointed On the other day, poojai is taking place only at the Lord's feet, Thirupizha is celebrated 10 days in Tirupurandhari Amman during Aadi Month.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

www.thirukalukundram.in