Thirukalukundrtam Temple

Thirukalukundrtam Temple

ஊர் : திருக்கழுக்குன்றம் ( பட்சி தீர்த்தம் )

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருமலை

இறைவி : அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மன்

இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சலேஸ்வரர் பெரியகோவில்

தல விருட்சம் : கதலி / வாழை மரம்

தீர்த்தம் : சங்கு தீர்த்தம்

Thirukalukundram Arulmigu Thiripurasundari Amman and Arulmigu Vedhagiriswarar Temple - Thirukazhukundram - Pakshi Thirtham
அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் உடனுறை அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம் - பட்சி தீர்த்தம்

Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple Thirukazhukundram
அருள்மிகு வேதகிரிஸ்வரர் திருக்கோவில் - திருக்கழுக்குன்றம்




Thirukalukundram Arulmigu ThiripuraSundari Amman and Vedhagiriswarar Temple - Thirukazhukundram - Pakshi Thirtham,Tamil Nadu - India

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் (திருமலை) திருக்கழுக்குன்றம் - பட்சி தீர்த்தம்

திருக்கழுக்குன்றம் இத்திருத்தலம் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் சுமார் 15km தொலைவில் உள்ளது.. தேவாரம் பாடல் பெற்ற 274 தலங்களுள் மாணிக்கவாசகர் சொல்லப்பட்ட தலங்கள் 29 திருவாசகத்தில் தலப்பெயருடன் வழங்கும் பதிகங்கள் மூன்று.இத் திருக்கழுக்குன்றம் திருமலை மேலுள்ள சிவ தலங்களில் முதன்மையான திருத்தலத்தில் நான்கு வேதங்கள் மாமலையாக அமைந்து அதன் உச்சியில் இறைவன் வேதகிரீஸ்வரர் சுயம்பு வடிவில் எழுந்தருளியிருகிறார். இந்த திருக்கழுக்குன்றத்தில் திருமலை உச்சியில் உள்ள வேதகிரீஸ்வர் திருக்கோவிலுக்கு அருகில் பூஷா, விருத்தா என்னும் முனிவர்கள் தம் பாவங்கள் தீர கழுகு வடிவில் தினசரி காலை 11.30 மணியளவில் வந்து உணவு அருந்தி செல்கின்றன,அதனால் திரு என்னும் அடைமொழி பெற்று திருக்கழுக்குன்றம் என்று ஊருக்கு பெயர் பெற்றது.கழு என்றால் "சூலம்" என்று பொருள். சூலத்தின் மூன்று முனைகளை போல் இம்மலை தோன்றுவதனால் கழுக்குன்றம் என்றும் பெயர் உண்டாக்கியது.

Thirukalukundram Vedhagiriswarar - Bhakthavatchaleswarar

இத்திருமலை வேதம் ஆதலால் இறைவன் திருமேனியே இத்திருமலை என அஞ்சி இங்கு திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் இத்திருமலை மேல் ஏறுவதற்கு அஞ்சி கீழிருந்தபடியே திருப்பதிகங்களை பாடினார்.அவர்கள் அங்ஙனம் இருந்து பாடிய இடம் நால்வர் கோயில் பேட்டை என இப்பொழுது வழங்கப்படுகிறது

மார்க்கண்டேயர் ஸ்வாமி தரிசனத்திற்காக திருக்கழுக்குன்றம் திருத்தலத்திற்கு விஜயம் செய்திருந்த போது இது சங்குதீர்த்த கரையில் பூஜை செய்தார்.அப்போது அபிஷேகம் செய்ய பாத்திரம் இல்லாததால், அவர் தம் போக சக்தியால் இந்த சங்குதீர்த்த குளத்தில் இருந்து சங்கு மேலே வந்தது.அந்த சங்கினால் பூஜை செய்தார்,அவர் பூஜை செய்த இடத்தில் தீர்த்தகரைஈஸ்வரர் அல்லது மார்கண்டேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இப்போதும் 12 ஆண்டிற்கு ஒரு முறை இத்திருக்குளத்திலிருந்து சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

Thirukazhukundram Arulmigu Vedhagiriswarar Temple,Thirukalukundram

Thirukalukundram hill Temple is one of the famous shiva temple in tamilnadu. Thirukalukundram Temple is located in 14 km from Chengalpattu,70km from Chennai,and 17 km from Mamallapuram. In this Thirukalukundram Temple God Name is Vedhagiriswarar,And Godess name is Thiripurasundari Amman. Thirukalukundram Vedhagiriswarar Temple is one of the 274 thevaram paadal petra sthalam of God Shiva.

கழுகு முனிவர்கள்

அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் கழுகு முனிவர்கள்

கழுகு முனிவர்கள்
     த்தலத்தின் முதல் யுகத்தில் சண்டன்-பிரசண்டன் என்ற இரு கழுகுகளும், இரண்டாவது யுகத்தில் சம்பாதி-சடாயு எனும் இரு கழுகு அரசர்களும் மூன்றாவது யுகத்தில் சம்புகுந்தன், மாகுந்தன் எனும் இருவரும் சாபம் பெற்று கழுகுகளாக பிறந்து முக்தி பெற்றனர்.
 
 

சண்டன்-பிரசண்டன்

         சான்மலி என்னும் நாட்டில் வாழ்ந்த விருத்த சிரவன் என்கிற முனிவருக்கு சண்டன் பிரசண்டன் என்கிற இரு மைந்தர்கள் தோன்றினர். அவ்விருவரும் முன் செய்த தீவினைத் தொடர்பால் கழுகுப் பறவைகளின் உருவம் பொருந்தினார்கள் .அவர்களை விருத்த சிரவரன்நீங்கள் பறவைகளுக்கு அரசாக விளங்கி இருங்கள்என்று கூறினான். அவர்கள்எங்களுக்கு அரசாட்சி செய்வதிலும் இல்லற வாழ்விலும் விருப்பம் இல்லை. ஞான முறையால், பரமசிவனை அடையத் தக்க முக்திப் பேற்றினைச் சொல்லுங்கள்என்று வேண்டினார். விருத்த சிரவரன் மகிழ்ந்து, சிவபூசை முறையினைஉணர்த்திவேதகிரியில் சென்று பரமசிவத்தை வணங்குங்கள்என்று அனுப்பினான். சண்டன், பிரசண்டனாகிய கழுகுருவமுடைய அவ்விருவரும் வேத வெற்பை அடைந்து நறுமணமுள்ள மலர்களாலும் நீரீனாலும் பரவுதல் செய்து பூசித்தனர். பரமசிவம் அவர்கள் முன் தோன்றிஉங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்என்றார். அவர்கள்ஒப்பில்லாத முக்த்தியே அடியேன்களுக்கு வேண்டியதுஎன்கிறார்கள். சிவபெருமான்இந்தக் கிரேதாயுகம் சென்ற பின் உங்களுக்கு முக்தியை அளிக்கிறோம். அதுகாறும் நம் பேரவையில் சிவகணங்களுக்குத் தலைவராய் இருங்கள்என்றருள் பாலித்தார். அவர்களும் அவ்வாறிருந்து முக்தி எய்தினார்கள்

 


 சம்பாதி-சடாயு

திரேதாயுகத்தில் ஒளி பொருந்திய திங்களைப் போன்ற வெண்மைநிறம் உடைய கழுகுகளுக்கு இறைவர்களாகிய சம்பாதி, சடாயு என்னும் கழுகுகள் மிகுந்த பலத்துடன் விளங்கி இருந்தனர்.  அவர்கள் தங்களுக்குள், பலத்தால் நான் பெரியவன் நான் பெரியவனென்று பகைத்தனர். மூத்தசம் பாதியும் பலம் பொருந்திய சடாயு என்ற தம்பியும்கதிரவனுக்கு மேல் போய் திரும்புவோம். திரும்பும் போது பார்க்கின்றவர்களுக்கு நம் உடல் பலம் தெரியும்என்று சபதம் செய்து முனிவர்கள் கூட்டத்தைச் சான்று வைத்து மேருகிரியினின்று எண்ணில் காலம்வானை யொட்டி பறக்கலாயினர். அளவிலாக்காதங்கள் இவர்கள் பறத்தலைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் மயங்கி ஓடினார்கள். அவர்களுடைய சிறகுக் காற்றினால் வித்தியாதரர்கள் சித்தர்கள் கின்னரர்கள் என்னும் இவர்கள் செல்கின்ற அளவற்ற தேர்களும் விமானங்களும் வழிதப்பி ஓடின. விண்மீன்களும் கதிர் மண்டலத்துப் பச்சைக் குதிரைகளும் பறந்து செல்கின்றவர்களைக் கண்டு மனங்கலங்கிக் கண்களை மூடின.

 

இவர்கள் இவ்வாறு கதிரவன் மண்டலம் நாடி வருவதைக் கண்ட கதிரவன் மண்டலத்திலிருக்கும் கணங்கள் பயந்து ஓடி கதிரவனிடம் கூறினர். இவ்வாறு இவர்கள் கதிரவன் மண்டலத்தில் புகுந்த அளவில் அங்கிருந்த வாய்மையில் சிறந்த அஞ்சனன் என்னும் முனிவன் அக்கழுகுகளை நோக்கி, “நீங்கள் ஆயிரங் கதிர்களையுடைய கதிரவன் கோயிலை அணுகும் படி செல்கிறீர்கள். ஆதலால் நீங்கள் தீயை எடுத்து ஆடையில் அடக்கிக் கொள்ளவும் எண்ணம் கொள்வீர்கள். தம்மில் தகுதியுடையவர்களுடைய வெம்மையைக் கண்டஞ்சாதவர்கள் இப்பிறப்பில் மட்டும் அன்றி மறுபிறப்பிலும் துன்புறுவார்கள். நெறியில் செல்லுங் கதிரவனைத் தடுத்த தன்மையால், உங்கள் தருக்கை உங்கள் தீமையே அழித்துவிடும். கதிரவனுடைய நெருப்பினால் நீங்கள் இருவரும் மனம் வெந்து மேனிகரிந்து வெந்து ஒன்றாய்விழக்கடவீர்என்று சாபம் மொழிந்தார்.

முன் சென்றவனாகிய சம்பாதி சிறகு வெந்தனன். அது வெந்த பின் சிறகு எல்லாம் சிந்திப் போய் பூமியில் விழுந்தான். பின் வந்த தம்பியாகிய சடாயு ஒளி பொருந்திய சிறகு வேகாதவனாய்ப் பொலிவுள்ள உடல் பொரிந்து துன்பத்துடன் அழுதான். இவ்வாறு விழுந்த இருவரும் வருந்தி வானில் இருக்கும் அஞ்சன முனிவனை அழைத்துவெந்த இக்குறை நீங்கும் முறைமையை அய்யனே! சொல்லும்என்று வேண்டினர். பெரிய வேதாசலத்தில் வீற்றிருக்கும் பரமசிவத்தைப் பூசித்தால் இந்தக்குறை அறிவில்லாதவர்களாகிய உங்களை விட்டோடும்என்று அவர்களை அம்முனிவர் அனுப்பினார்

 

அவ்வஞ்சன முனிவர் கூறிய வண்ணம் சம்பாதி, சடாயு வாகிய இருவரும் வேதகிரியினிடத்திற் சென்று அங்கு இருக்கும் தடாக நீராலும் மலர்களாலும் இறைவனைப் பூசித்தனர். அந்தத் திரேதாயுகத்தில் அவ்விருவருக்கும் பரமசிவம் தரிசனம் கொடுத்தருளி அவர்கள் உடலிற்பொருந்திய வெப்பத்தைத் தணித் தருளிப் பழையபலம்உண்டாகக்செய்து, அதன் பின்புசம்பாதியை நோக்கிசீதையைத் தேடி இராமன் விடுக்கும் தூதர்களால் உனக்குச் சிறகு உண்டாகும்என்றருள் செய்தார். இத்திருவருளைப் பெற்றுக் கொண்டு அவர்கள் சென்றார்கள்.

 சம்புகுத்தன்-மாருத்தன்

துவாபரயுகத்தில், பார்வதி தேவியாருக்கும் ஒரு பாகம் தந்தருளிய பரமசிவம் வீற்றிருந்தருளுகின்ற உருத்திரகோடியில் சம்புகுத்தன், மாருத்தன் எனும் பெயர்ளையுடைய இருவர் நெடுங்காலம் தவஞ் செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு உடலுக்கு ஓருயிர் போல் இருந்த இவர்களில் மூத்தவன்சிவமேபெரிதுஎன்றனன். அது கேட்ட இளையவன்சக்தியே பெரிதுஎன்று கூறினான். இதனால், இவர்களுக்குள் ஒழியாத பகையுண்டாகியது. இதனை எந்த முனிவர்களிடம் சொன்னாலும் அவர்கள் எம் போலியர்களாதலின் சொல்வதரிது என்று கோபம் தணியாமல் இதற்குப் பரமசிவமே சான்றாகும் என்று முனிவர் இருவரும் கூடிச்சென்று பரமசிவத்தின் முன்பணிந்து நின்று விண்ணப்பஞ்செய்ய சிவபெருமான்சிவம், சக்தி என்கிற இருமொழியும் ஒரு மொழியோடொக்கும். ஆதலின் உங்கள் கோபத்தை விடுங்கள்என்று திருவாய்மலர் தருளினார் சிவபெருமான் கூறியும் இருவரும் ஒருவரோடொருவர் பொறுமை இழந்து சக்தியே பெரியதென்றும் சிவமேபெரியதென்றும் வாதிட்டனர். அவ்விருவரின் நிலையைக் கண்டு பரமசிவமும் பராசக்தியும் ஒருவர் முகத்தை யொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். ஒளியும் மாணிக்கமும், கடலும், அலையும், அமுதமும் சுவையும், எள்ளும் எண்ணெயும், பொன்னும் அணியும் போல் பிரியாமலிருக்கிற தங்களைப் பிரித்துரைத்த அவர்களை சக்தி பெரியதென்றவனைச் சக்தியும், சிவம் பெரியதென்றவனைச் சிவமும் நோக்கி, “நீங்கள் இருவரும் கழுகுகளாய்ச் சுழலக் கடவீர்கள்என்று சபித்தார்கள். அவர்கள் இருவரும் அப்பொழுதே கழுகுகளாகி நடுநடுங்கிஅய்யனே! எங்கள் குற்றங்களைப் பொறுத்தருளி,  இக்கழுகுருவம் நீங்கும் இடமும் காலமும் கட்டளையிட்டருள வேண்டும்என்ற விண்ணப்பம் செய்யஇந்த யுகம் நீங்கும் போது அந்த வரம் உங்களுக்குத் தந்தருளுகிறோம். அப்படித் தருகிற வரைக்கும் தவத்தையும் பூசையையும் நீங்கள் இவ்வேத தலத்தில் செய்யுங்கள்என்று கட்டளையிட்டருளினர். அன்புடன் செய்து பழையஉருவம் பெற்றுய்ந்தார்கள்.

 

பூஷா-விருத்தா

கலியுகத் தோற்ற முதல் வேத வெற்பினிடத்து பூஷா, விருத்தா என்கிற இருமுனிவர் நெடுங்காலம் தவம் செய்தார்கள். இளையவனும் மூத்தவனும் அரிய தவஞ்செய்த அளவில் சிவபெருமான் திருவுளம் மகிழ்ந்து, “உங்களுக்கு நம்முடைய திருமேனியருள் செய்தோம். ஒருகற்பகாலம் அந்தப் பதவியில் இருங்கள், அவ்வாறிருந்தால் பிறகு முத்தியையும் அளிக்கிறோம்என்றருளிச் செய்தார். அவர்கள்அதுவரைக்கும் ஐம்பொறிகள் நன்மார்க்கத்தில் இருப்பதை யார்கண்டார்கள்? நிருமல மூர்த்தியே! இப்போதே எங்களுக்கு முத்திப் பேற்றினை அளித்தருள வேண்டும்என்கிறார்கள். சிவபெருமான்நம்முடைய திருமேனி போல் உருவந்தரித் திருத்தலையும் விரும்பாதவர்களாய், நம்முடைய திருவருளால் உரைத்த ஏவலையும் ஏற்றுக் கொள்ளாது நீக்கிவிட்டீர்கள். ஆதலால், நீங்கள் கழுகுருவாகப் பிறந்து கடல் சூழ்ந்த உலகில் திரியுங்கள்என்று சபித்தார். அந்த இருவரும் பயந்துஎங்கள் குறையைப் பொறுத்தருளும்எனப் பணிந்து, ‘கழுகுருவமாகப் பிறந்தாலும் உம்முடைய திருவடித் தொண்டில் மயக்கம் இல்லாமையும் இந்தச் சாபத்தின் முடிவும் கட்டளையிட்டருள வேண்டும்என்று விண்ணப்பித்தனர். சிவபெருமான்நீங்கள் காசிப முனிவரிடத்தில் கழுகுகளாய்ப் பிறந்து, உங்களுடைய மூக்குளால் இந்த மலையினைக் கீறினால் அதில் ஆகாயகங்கை அலைவீச உண்டாகும். அந்தத் தீர்த்தத்தில் முழுகி விருப்பத்துடன் எம்மைப்பூசியுங்கள். அவ்வாறு பூசித்துக் கலியுக முடிவில் முக்தி அடையுங்கள்என்று திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு அருளியவுடன் அவ்விருவரும் கைகுவித்துத் தொழுது, காசிப முனிவரிடத்தில் போய் சம்பு ஆதி என்ற பெயருடன் கழுகுகளாய் பிறந்து, பரமசிவம் கட்டளையிட்ட படி வேதகிரியில் தம் முக்குகளால் கீறினர். தடாக முண்டாகியது. அதில் மூழ்கி மலையை வலம் வந்து இறைவனைப் பூசித்துக் கொண்டிருக்களாயினர். கழுகு முனிவர்கள் முறையே பூசித்துக் கொண்டு வருவதால் இப்பதிக்கு திருக்கழுக்குன்றம் எனும் பெயருண்டாகியது. கழுக்குன்றம், கங்காசலம் எனும் பெயர்கள் உண்டாயின.

 
 


கழுகு உணவு பெறுதல்

இத்தலத்திற்கு வரும் வடநாட்டு யாத்ரிகர்களுக்குப் 'பட்சி தீர்த்தம் ' என்று சொன்னால்தான் புரியும். இம்மலையை வலம் வருதல் சிறப்புடையது.

தாழக்கோயில், கல்மண்டபத்தின் மீது செங்கல்லால் அமைக்கப்பட்ட மிகப் பழமையான கோயில். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோயிலுக்கு வெளியே ஐந்து தேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சந்நிதிக்கு எதிரில் உள்ள மிக்க புகழுடைய 'சங்கு தீர்த்த'த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சங்கு' பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, இம்மலையை வலம் வரின் உடற்பிணி நீங்கும். 
 
 
 
 
 
 திருக்கழுக்குன்றம் கழுகுகள்
 
     மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நமது  திருக்கழுக்குன்றம் கழுகுகள் சென்றுள்ளன. அதன்விவரம்:-
 
ஜூன் 17,1921 அன்று சுமார் காலை 9 .00 மணிக்கு  இரண்டு வெள்ளை கழுகுகள் மதுரை கோவிலில் காணப்பட்டன. அவைகள் உடனடியாக புகைப்படம் எடுக்கப்பட்டன, மேலும் அந்த புகைப்படம் மதுரை கோயிலின் பெறுநரின் பின்வரும் கடிதத்துடன் #திருக்கழுக்குன்றம்  கோவிலின் அறங்காவலருக்கு அனுப்பப்பட்டது.
 
        இன்று சுமார் 9.00A.M மணிக்கு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் உள்ள பொற்றாமரை  குளத்தில்  இரண்டு கழுகுகள் வந்து, குளத்தில் குளித்துவிட்டு படிகளில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்தன. அவைகளுடைய  புகைப்படம் காலை சுமார் 10.30 மணிக்கு எடுக்கப்பட்டது. அவர்கள் பொற்றாமறை குளத்ததை சுற்றி பறந்து குளத்தை  ஒட்டிய மண்டபத்தில் ஓய்வெடுத்து பின்னர்  கிளம்பி பறந்து சென்றன.#திருக்கழுக்குன்றத்திற்கு  தினமும் செல்லும் ஒரே மாதிரியான கழுகுகள் என்று இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். புகைப்படம் எடுக்கப்பட்ட கழுகுகள் உங்கள் கோவிலில் நீங்கள் காணும் ஒரே மாதிரியானவை என்பதையும், வழக்கமான நேரத்தில் அல்லது இந்த நாளின் போது எந்த நேரத்திலும் அவை அங்கு காணப்பட்டதா என்பதையும் தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ”
 
      திருக்கழுக்குன்றம் கோயிலின் அறங்காவலர், அவரும் அவர் புகைப்படத்தைக் காட்டிய பல மென்மையான மனிதர்களும், புகைப்படத்தில் உள்ள கழுகுகளை #திருக்கழுக்குன்றத்தின் புனித கழுகுகள் என்று ஒரே நேரத்தில் அடையாளம்காணமுடியும்என்றுபதிலளித்தார்.வேதகிரீஸ்வரர் மலையிலிருந்து  சில படிகள் இறங்கிய பிறகு, ஒரு ஒற்றைக் குகைக் கோயில் காணப்படுகிறது. இந்த மண்டபம் அரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது மற்றும் மாமல்லர் காலத்திற்கு (ஏ.டி. 610-640) சொந்தமானது.குகையில் இரண்டு வராண்டாக்கள் உள்ளன, ஒவ்வொன்றும் நான்கு பிரமாண்ட தூண்களால் ஆதரிக்கப்படுகின்றன. விசித்திரம் என்னவென்றால், சிற்பங்களுடன் கூடிய முழு மண்டபமும் ஒரே பாறையிலிருந்து வெட்டப்படுகிறது. எனவே இந்த குகை ஒருகல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
 
        கிழக்குப் பகுதியில், மலையின் அடிவாரத்தில், ஒரு சிறிய சன்னதி நால்வர் கோயில் உள்ளது, அங்கிருந்து அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நான்கு தமிழ் புனிதர்கள் வேதகிரிஸ்வரரை  தரிசனம் செய்தனர். வேதகிரிஸ்வரரின் துணைவியார் மலையில் காணப்படவில்லை. நகரத்தின் மையத்தில் உள்ள #பகவத்சலேஸ்வரர் கோவிலில்  அம்மன் சன்னதி உள்ளது.இந்த கோவிலில் நான்கு கோபுரங்கள் (கோபுரங்கள்) உள்ளன, மிக உயரமானவை ஒன்பது அடுக்குகளுடன் (வடக்கு  பக்கத்தில்), மற்ற மூன்று கோபுரங்களும் முறையே ஏழு.ஐந்து அடுக்குகள் என உள்ளன.மலையில்  தெய்வத்திற்கு முன் நந்தி இல்லாதது ஒரு தனித்துவமான அம்சமாகும். நந்தி ஒரு முறை பூமியில் தவம் செய்தார். மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி ஒரு வரம் கேட்கச் சொன்னார்.அந்த இடத்திற்கும் குளத்திற்கும் தனது பெயரை வைக்க வேண்டுமென நந்தி விரும்பினார், குளத்தில்  நீராடி வேதகிரிஸ்வரரை வணங்குபவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது., எனவே இந்த இடம் நந்திபுரம் என்றும் குளம்  நந்தி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

www.thirukalukundram.in